அனைத்து சூராக்கள்

சூரா 89

The Dawn

سُورَةُ الفَجۡرِ

Al-Fajr · மக்கா

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ

    ஒலிபெயர்ப்பு: Wal-Fajr

    விடியற் காலையின் மீது சத்தியமாக,

  2. 2

    وَلَيَالٍ عَشْرٍۢ

    ஒலிபெயர்ப்பு: Wa layaalin 'ashr

    பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

  3. 3

    وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

    ஒலிபெயர்ப்பு: Wash shaf'i wal watr

    இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

  4. 4

    وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

    ஒலிபெயர்ப்பு: Wallaili izaa yasr

    செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

  5. 5

    هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ

    ஒலிபெயர்ப்பு: Hal fee zaalika qasamul lizee hijr

    இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

  6. 6

    أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

    ஒலிபெயர்ப்பு: Alam tara kaifa fa'ala rabbuka bi'aad

    உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

  7. 7

    إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

    ஒலிபெயர்ப்பு: Iramaa zaatil 'imaad

    (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,

  8. 8

    ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ

    ஒலிபெயர்ப்பு: Allatee lam yukhlaq misluhaa fil bilaad

    அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.

  9. 9

    وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

    ஒலிபெயர்ப்பு: Wa samoodal lazeena jaabus sakhra bil waad

    பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)

  10. 10

    وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

    ஒலிபெயர்ப்பு: Wa fir'awna zil awtaad

    மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

  11. 11

    ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ

    ஒலிபெயர்ப்பு: Allazeena taghaw fil bilaad

    அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

  12. 12

    فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

    ஒலிபெயர்ப்பு: Fa aksaroo feehal fasaad

    அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

  13. 13

    فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

    ஒலிபெயர்ப்பு: Fasabba 'alaihim Rabbuka sawta 'azaab

    எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.

  14. 14

    إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

    ஒலிபெயர்ப்பு: Inna Rabbaka labil mirsaad

    நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.

  15. 15

    فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

    ஒலிபெயர்ப்பு: Fa ammal insaanu izaa mab talaahu Rabbuhoo fa akramahoo wa na' 'amahoo fa yaqoolu Rabbeee akraman

    ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.

  16. 16

    وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ

    ஒலிபெயர்ப்பு: Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan

    எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.

  17. 17

    كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

    ஒலிபெயர்ப்பு: Kalla bal laa tukrimooo nal yateem

    அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

  18. 18

    وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

    ஒலிபெயர்ப்பு: Wa laa tahaaaddoona 'alaata'aamil miskeen

    ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

  19. 19

    وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا

    ஒலிபெயர்ப்பு: Wa taakuloonat turaasa aklal lammaa

    இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

  20. 20

    وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا

    ஒலிபெயர்ப்பு: Wa tuhibboonal maala hubban jammaa

    இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

  21. 21

    كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا

    ஒலிபெயர்ப்பு: Kallaaa izaaa dukkatil ardu dakkan dakka

    அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

  22. 22

    وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا

    ஒலிபெயர்ப்பு: Wa jaaa'a Rabbuka wal malaku saffan saffaa

    உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,

  23. 23

    وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

    ஒலிபெயர்ப்பு: Wa jeee'a yawma'izim bi jahannnam; Yawma 'iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa

    அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

  24. 24

    يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

    ஒலிபெயர்ப்பு: Yaqoolu yaa laitanee qaddamtu lihayaatee

    "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.

  25. 25

    فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ

    ஒலிபெயர்ப்பு: Fa Yawma izil laa yu'azzibu 'azaabahooo ahad

    ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

  26. 26

    وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ

    ஒலிபெயர்ப்பு: Wa laa yoosiqu wasaaqa hooo ahad

    மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

  27. 27

    يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

    ஒலிபெயர்ப்பு: Yaaa ayyatuhan nafsul mutma 'innah

    (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!

  28. 28

    ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ

    ஒலிபெயர்ப்பு: Irji'eee ilaa Rabbiki raadiyatam mardiyyah

    நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

  29. 29

    فَٱدْخُلِى فِى عِبَٰدِى

    ஒலிபெயர்ப்பு: Fadkhulee fee 'ibaadee

    நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

  30. 30

    وَٱدْخُلِى جَنَّتِى

    ஒலிபெயர்ப்பு: Wadkhulee jannatee

    மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.

The Dawn — Islam Word