விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா
- 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ
ஒலிபெயர்ப்பு: Wal-Fajr
விடியற் காலையின் மீது சத்தியமாக,
- 2
وَلَيَالٍ عَشْرٍۢ
ஒலிபெயர்ப்பு: Wa layaalin 'ashr
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
- 3
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
ஒலிபெயர்ப்பு: Wash shaf'i wal watr
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
- 4
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
ஒலிபெயர்ப்பு: Wallaili izaa yasr
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
- 5
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ
ஒலிபெயர்ப்பு: Hal fee zaalika qasamul lizee hijr
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
- 6
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
ஒலிபெயர்ப்பு: Alam tara kaifa fa'ala rabbuka bi'aad
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
- 7
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
ஒலிபெயர்ப்பு: Iramaa zaatil 'imaad
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
- 8
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ
ஒலிபெயர்ப்பு: Allatee lam yukhlaq misluhaa fil bilaad
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
- 9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
ஒலிபெயர்ப்பு: Wa samoodal lazeena jaabus sakhra bil waad
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
- 10
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
ஒலிபெயர்ப்பு: Wa fir'awna zil awtaad
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
- 11
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ
ஒலிபெயர்ப்பு: Allazeena taghaw fil bilaad
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
- 12
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
ஒலிபெயர்ப்பு: Fa aksaroo feehal fasaad
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
- 13
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
ஒலிபெயர்ப்பு: Fasabba 'alaihim Rabbuka sawta 'azaab
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
- 14
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
ஒலிபெயர்ப்பு: Inna Rabbaka labil mirsaad
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
- 15
فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
ஒலிபெயர்ப்பு: Fa ammal insaanu izaa mab talaahu Rabbuhoo fa akramahoo wa na' 'amahoo fa yaqoolu Rabbeee akraman
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
- 16
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ
ஒலிபெயர்ப்பு: Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
- 17
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
ஒலிபெயர்ப்பு: Kalla bal laa tukrimooo nal yateem
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
- 18
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
ஒலிபெயர்ப்பு: Wa laa tahaaaddoona 'alaata'aamil miskeen
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
- 19
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا
ஒலிபெயர்ப்பு: Wa taakuloonat turaasa aklal lammaa
இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
- 20
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا
ஒலிபெயர்ப்பு: Wa tuhibboonal maala hubban jammaa
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
- 21
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا
ஒலிபெயர்ப்பு: Kallaaa izaaa dukkatil ardu dakkan dakka
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
- 22
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا
ஒலிபெயர்ப்பு: Wa jaaa'a Rabbuka wal malaku saffan saffaa
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
- 23
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
ஒலிபெயர்ப்பு: Wa jeee'a yawma'izim bi jahannnam; Yawma 'iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
- 24
يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
ஒலிபெயர்ப்பு: Yaqoolu yaa laitanee qaddamtu lihayaatee
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
- 25
فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ
ஒலிபெயர்ப்பு: Fa Yawma izil laa yu'azzibu 'azaabahooo ahad
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
- 26
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ
ஒலிபெயர்ப்பு: Wa laa yoosiqu wasaaqa hooo ahad
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
- 27
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
ஒலிபெயர்ப்பு: Yaaa ayyatuhan nafsul mutma 'innah
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
- 28
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ
ஒலிபெயர்ப்பு: Irji'eee ilaa Rabbiki raadiyatam mardiyyah
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
- 29
فَٱدْخُلِى فِى عِبَٰدِى
ஒலிபெயர்ப்பு: Fadkhulee fee 'ibaadee
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
- 30
وَٱدْخُلِى جَنَّتِى
ஒலிபெயர்ப்பு: Wadkhulee jannatee
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil
வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).
உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.
ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.