விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா
- 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ
ஒலிபெயர்ப்பு: 'Amma Yatasaa-aloon
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
- 2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
ஒலிபெயர்ப்பு: 'Anin-nabaa-il 'azeem
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
- 3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
ஒலிபெயர்ப்பு: Allazi hum feehi mukh talifoon
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
- 4
كَلَّا سَيَعْلَمُونَ
ஒலிபெயர்ப்பு: Kallaa sa y'alamoon
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
- 5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
ஒலிபெயர்ப்பு: Thumma kallaa sa y'alamoon
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
- 6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا
ஒலிபெயர்ப்பு: Alam naj'alil arda mihaa da
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
- 7
وَٱلْجِبَالَ أَوْتَادًۭا
ஒலிபெயர்ப்பு: Wal jibaala au taada
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
- 8
وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا
ஒலிபெயர்ப்பு: Wa khalaq naakum azwaaja
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
- 9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا
ஒலிபெயர்ப்பு: Waja'alnan naumakum subata
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
- 10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا
ஒலிபெயர்ப்பு: Waja'alnal laila libasa
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
- 11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا
ஒலிபெயர்ப்பு: Waja'alnan nahara ma 'aasha
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
- 12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا
ஒலிபெயர்ப்பு: Wa banaina fauqakum sab 'an shi daada
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
- 13
وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا
ஒலிபெயர்ப்பு: Waja'alna siraajaw wah haaja
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
- 14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا
ஒலிபெயர்ப்பு: Wa anzalna minal m'usiraati maa-an saj-jaaja
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
- 15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا
ஒலிபெயர்ப்பு: Linukh rija bihee habbaw wana baata
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
- 16
وَجَنَّٰتٍ أَلْفَافًا
ஒலிபெயர்ப்பு: Wa jan naatin alfafa
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
- 17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا
ஒலிபெயர்ப்பு: Inna yaumal-fasli kana miqaata
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
- 18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا
ஒலிபெயர்ப்பு: Yauma yun fakhu fis-soori fataa toona afwaaja
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
- 19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا
ஒலிபெயர்ப்பு: Wa futiha tis samaa-u fakaanat abwaaba
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
- 20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
ஒலிபெயர்ப்பு: Wa suyyi raatil jibaalu fa kaanat saraaba
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
- 21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا
ஒலிபெயர்ப்பு: Inna jahan nama kaanat mirsaada
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
- 22
لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا
ஒலிபெயர்ப்பு: Lit taa gheena ma aaba
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
- 23
لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا
ஒலிபெயர்ப்பு: Laa bitheena feehaa ahqaaba
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
- 24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا
ஒலிபெயர்ப்பு: Laa ya zooqoona feeha bar daw walaa sharaaba
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
- 25
إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا
ஒலிபெயர்ப்பு: Illa hamee maw-wa ghas saaqa
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
- 26
جَزَآءًۭ وِفَاقًا
ஒலிபெயர்ப்பு: Jazaa-aw wi faaqa
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
- 27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا
ஒலிபெயர்ப்பு: Innahum kaanu laa yarjoona hisaaba
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
- 28
وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا
ஒலிபெயர்ப்பு: Wa kazzabu bi aayaa tina kizzaba
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
- 29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا
ஒலிபெயர்ப்பு: Wa kulla shai-in ahsai naahu kitaa ba
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
- 30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
ஒலிபெயர்ப்பு: Fa zooqoo falan-nazee dakum ill-laa azaaba
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
- 31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
ஒலிபெயர்ப்பு: Inna lil mutta qeena mafaaza
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
- 32
حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا
ஒலிபெயர்ப்பு: Hadaa-iqa wa a'anaa ba
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
- 33
وَكَوَاعِبَ أَتْرَابًۭا
ஒலிபெயர்ப்பு: Wa kaawa 'iba at raaba
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
- 34
وَكَأْسًۭا دِهَاقًۭا
ஒலிபெயர்ப்பு: Wa ka'san di haaqa
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
- 35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا
ஒலிபெயர்ப்பு: Laa yasma'oona fiha lagh waw walaa kizzaba
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
- 36
جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا
ஒலிபெயர்ப்பு: Jazaa-am mir-rabbika ataa-an hisaaba
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
- 37
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا
ஒலிபெயர்ப்பு: Rabbis samaa waati wal ardi wa maa baina humar rahmaani laa yam likoona minhu khi taaba
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
- 38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا
ஒலிபெயர்ப்பு: Yauma yaqoo mur roohu wal malaa-ikatu saf-fal laa yata kalla moona illa man azina lahur rahmaanu wa qaala sawaaba
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
- 39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
ஒலிபெயர்ப்பு: Zaalikal yaumul haqqu faman shaa-at ta khaaza ill-laa rabbihi ma-aaba
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
- 40
إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
ஒலிபெயர்ப்பு: In naa anzar naakum azaaban qareebaiy-yauma yan zurul marr-u maa qaddamat yadaahu wa ya qoolul-kaafiru yaa lai tanee kuntu turaaba
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil
வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).
உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.
ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.