அனைத்து சூராக்கள்

சூரா 75

The Resurrection

سُورَةُ القِيَامَةِ

Al-Qiyaama · மக்கா

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ

    ஒலிபெயர்ப்பு: Laaa uqsimu bi yawmil qiyaamah

    கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

  2. 2

    وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

    ஒலிபெயர்ப்பு: Wa laaa uqsimu bin nafsil lawwaamah

    நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

  3. 3

    أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Ayahsabul insaanu al lan najm'a 'izaamah

    (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

  4. 4

    بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Balaa qaadireena 'alaaa an nusawwiya banaanah

    அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

  5. 5

    بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Bal yureedul insaanu liyafjura amaamah

    எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

  6. 6

    يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ

    ஒலிபெயர்ப்பு: Yas'alu ayyyaana yawmul qiyaamah

    "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

  7. 7

    فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

    ஒலிபெயர்ப்பு: Fa izaa bariqal basar

    ஆகவே, பார்வையும் மழுங்கி-

  8. 8

    وَخَسَفَ ٱلْقَمَرُ

    ஒலிபெயர்ப்பு: We khasafal qamar

    சந்திரன் ஒளியும் மங்கி-

  9. 9

    وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

    ஒலிபெயர்ப்பு: Wa jumi'ash shamusu wal qamar

    சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

  10. 10

    يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

    ஒலிபெயர்ப்பு: Yaqoolul insaanu yaw ma 'izin aynal mafarr

    அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

  11. 11

    كَلَّا لَا وَزَرَ

    ஒலிபெயர்ப்பு: Kallaa laa wazar

    "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).

  12. 12

    إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

    ஒலிபெயர்ப்பு: Ilaa rabbika yawma 'izinil mustaqarr

    அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

  13. 13

    يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

    ஒலிபெயர்ப்பு: Yunabba 'ul insaanu yawma 'izim bimaa qaddama wa akhkhar

    அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

  14. 14

    بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ

    ஒலிபெயர்ப்பு: Balil insaanu 'alaa nafsihee baseerah

    எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

  15. 15

    وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Wa law alqaa ma'aazeerah

    அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

  16. 16

    لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

    ஒலிபெயர்ப்பு: Laa tuharrik bihee lisaa naka lita'jala bih

    (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

  17. 17

    إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Inna 'alainaa jam'ahoo wa qur aanah

    நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

  18. 18

    فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Fa izaa qaraanaahu fattabi' qur aanah

    எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

  19. 19

    ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Summa inna 'alainaa bayaanah

    பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

  20. 20

    كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

    ஒலிபெயர்ப்பு: Kallaa bal tuhibboonal 'aajilah

    எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

  21. 21

    وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ

    ஒலிபெயர்ப்பு: Wa tazaroonal Aakhirah

    ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

  22. 22

    وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ

    ஒலிபெயர்ப்பு: Wujoohuny yawma 'izin naadirah

    அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

  23. 23

    إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ

    ஒலிபெயர்ப்பு: Ilaa rabbihaa naazirah

    தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

  24. 24

    وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ

    ஒலிபெயர்ப்பு: Wa wujoohuny yawma 'izim baasirah

    ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

  25. 25

    تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ

    ஒலிபெயர்ப்பு: Tazunnu any yuf'ala bihaa faaqirah

    இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

  26. 26

    كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

    ஒலிபெயர்ப்பு: Kallaaa izaa balaghatit taraaqee

    அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

  27. 27

    وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ

    ஒலிபெயர்ப்பு: Wa qeela man raaq

    "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.

  28. 28

    وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

    ஒலிபெயர்ப்பு: Wa zanna annahul firaaq

    ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

  29. 29

    وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

    ஒலிபெயர்ப்பு: Waltaffatis saaqu bissaaq

    இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

  30. 30

    إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

    ஒலிபெயர்ப்பு: Ilaa rabbika yawma'izinil masaaq

    உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

  31. 31

    فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    ஒலிபெயர்ப்பு: Falaa saddaqa wa laa sallaa

    ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.

  32. 32

    وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

    ஒலிபெயர்ப்பு: Wa laakin kazzaba wa tawalla

    ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

  33. 33

    ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Summa zahaba ilaaa ahlihee yatamatta

    பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

  34. 34

    أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

    ஒலிபெயர்ப்பு: Awlaa laka fa awlaa

    கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

  35. 35

    ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Summa awlaa laka fa awla

    பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

  36. 36

    أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى

    ஒலிபெயர்ப்பு: Ayahsabul insaanu anyytraka sudaa

    வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

  37. 37

    أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ

    ஒலிபெயர்ப்பு: Alam yaku nutfatam mim maniyyiny yumnaa

    (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

  38. 38

    ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ

    ஒலிபெயர்ப்பு: Summa kaana 'alaqata fakhalaq fasawwaa

    பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

  39. 39

    فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

    ஒலிபெயர்ப்பு: Faja'ala minhuz zawjayniz zakara wal unsaa

    பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

  40. 40

    أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ

    ஒலிபெயர்ப்பு: Alaisa zaalika biqaadirin 'alaaa any yuhyiyal mawtaa

    (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.

The Resurrection — Islam Word